Dec 31, 2009

கடைசியாக விடைபெறுகிறேன்... [முற்றிலுமாக]

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இதை எப்படி ஆரம்ப்பது என்றே தெரியவில்லை...மனசு மிகவும் கணமாக இருக்கிறது.எப்படியும் சொல்லிதானே ஆகவேண்டும், கண் குளம் போல் நீர் தேங்கி கிடக்கிறது. இவ்வளவு நாட்களாக பழகிவிட்டு எதுவும் சொல்லாமல் சென்றால் எல்லாருக்கும் மனசு கஷ்டமாக இருக்கும், ஆதலாம் கடைசியாக செல்வதற்கு முன்பு சொல்லிவிட்டு போகலாம் என்றுதான் இந்த பதிவு.

வரவர அனைத்து விசயங்கள் மீதும் கோவமும் ஒரு வெறுமையும் ஏற்படுகிறது, மற்றவர்களின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவர்கள் மீது ஆத்திரமும், சில சமயம் பச்சாதாபமும் வருகிறது... தொன்றுதொட்டு தொடரும் வேதனை மீண்டும் வேண்டாம் என்றுதான் இந்த முடிவு.

எதற்கு விடை பெறுகிறேன் என்று தெளிவாக சொல்ல தெரியவில்லை. ஒன்று மட்டும் உறுதி கண்டிப்பாக திரும்ப வரமாட்டேன், ஆமாம் முற்றிலுமாக ஒழியபோய்கிறேன். எல்லாருக்கும் ஒவ்வொரு எல்லை இருக்கும், உலகில் உருவாகின்ற ஒவ்வொன்றுக்கும் கண்டிப்பாக அழிவும் இருக்கும். ஏதாவது ஒருவிதத்தில் நான் உங்களை காயபடுத்திருக்கலாம், எனது வார்த்தைகள் மனதை வருத்தபட வைத்திருக்கலாம். எனது செயல்பாடுகள் உங்களை கஷ்டபடுத்திருக்கலாம், உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் துன்பத்திற்கோ இன்பத்திற்கோ நான் காரனமாய் இருந்திருக்கலாம். துன்பத்திற்கு ஒரே வார்த்தையில் மன்னிப்பு என்று கேட்டு இதற்கு எல்லாம் ஈடுகட்ட நினைக்கவில்லை. மன்னிப்பு என்ற வார்த்தையும் இதற்கு அருகதை இல்லை.  நான் கூறிய வார்த்தைகள் காய படுத்தி இருக்கலாம், அல்லது எனது செயல்கள் உங்களையோ உங்களை சாந்தவர்களையோ காயபடுத்தி இருக்கலாம். இதற்கு எல்லாம் ஒரே தீர்வு கடைசியாக முற்றும் போடுவதுதான். ஆம்! இதுதான் எனது கடைசி.




இதற்கு பிறகு நான் உங்களை சந்திக்கவே போவதில்லை. இந்த நினைப்பே மிகவும் கொடுமையாக இருக்கின்றது.  இவ்வளவு நாள் நன்றாய் பழகிவிட்டு திடீர் என்று யாரையும் இனிமேல் சந்திகபோவதில்லை என்பது மிகவும் கொடுமையான விசயம் தான். என்ன செய்வது ஒவ்வொன்றுக்கும் கால நிர்ணயம் ஒன்று உண்டு அல்லவா... இதை எழுதும் போது எனது கண்ணில் சிறிது கண்ணீர்... நான் தவறு செய்வதாக நினைக்கிறீர்களா? செய்திருந்தாலும்... எதையும் மாற்றவே அழிக்கவே முடியாது. நாம் அனைவரும் ஏற்கனவே போடப்பட்ட பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம், அனைத்தும் முன்பே தீர்மானிக்கபட்டதுதான். என்க்கு நல்லது என்று தோன்றியது உங்களுக்கு தப்பாக பட்டிருக்கலாம்.

நமக்கு இதுதான் கடைசி நாள்.

விடைபெறுகிறேன்
கண்ணிருடன்
முற்றிலுமாக


































































































































































































































































































































இப்படிக்கு
உங்களுடன் உறவாடிய கடந்த ஆண்டு (2009)

3 comments :

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

:-)

angel said...

enga calendar ah thoki poda evlo feelingsah?

goma said...

பதிவிட்ட தேதியைப் பார்த்ததும் கண்டு பிடித்து விட்டேன்...நம்மிடம் பேசுவது 2009 என்று